Published : 13 Nov 2017 09:55 AM
Last Updated : 13 Nov 2017 09:55 AM

358 கிலோ போதைப் பொருள்பறிமுதல்: 2 பேர் கைது

தடை செய்யப்பட்ட 358 கிலோ போதைப் பொருள் எழும்பூரில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எழும்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள ரவுண்டானாவில் போலீஸார் நேற்று முன்தினம் வாகன சோனையில் ஈடுபட்டனர். அப்போது, பைக்கில் வந்த 2 பேரிடம் விசாரித்தபோது அவர்கள் சிந்தாதிரிப்பேட்டை சஞ்சீவி ராமன் (62), சூளைமேடு பாலசுப்பிரமணியன் (48) என்பது தெரியவந்தது. அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் அவர்கள் கோடம்பாக்கத்தில் பதுக்கி வைத்திருந்த தடை செய்யப்பட்ட 146 கிலோ மாவா, 212 கிலோ ஜர்தா பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x