Published : 02 Nov 2017 09:22 AM
Last Updated : 02 Nov 2017 09:22 AM
நவம்பர் 8-ம் தேதி திமுக நடத்தும் கருப்பு தின ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் சு.திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார்.
பிரதமர் மோடி அறிவித்த பணமதிப்பு நீக்க அறிவிப்பு கடந்த ஆண்டு நவ.8 அன்று வெளியானது. கடந்த ஓராண்டாக பணமதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. வரும் நவ.8 அன்று கருப்பு தினமாக அறிவித்துள்ளன. தமிழகத்திலும் அனைத்து எதிர்க்கட்சிகளும் கருப்பு தினத்தை கடைபிடிக்க உள்ளன.
திமுக நடத்தும் கருப்பு தின ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்கும் என திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பொருளாதார சீரழிவு, மக்களின் பாதிப்பை கருத்தில்கொண்டு பண மதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்ட நவம்பர் 8-ம் தேதியை கருப்பு தினமாக கடைபிடிப்பது என மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
இதன்படி, தமிழகத்தில் வரும் 8-ம் தேதி திமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியும் பங்கேற்கிறது. இவ்வாறு திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT