Published : 08 Nov 2017 08:51 AM
Last Updated : 08 Nov 2017 08:51 AM
ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் தொடர்பான வழக்கில், தீபாவின் வழக்கறிஞர், தலைமைச் செயலர் முன் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து அவரது அண்ணன் மகள் தீபா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், “ஜெ.தீபாவின் மனுவை அரசே பரிசீலித்து உரிய முடிவெடுக்க உள்ளது’’ என்றார்.
இதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதி, ஜெ.தீபாவின் மனுவை 4 வாரத்தில் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டார். இந்நிலையில், இது தொடர் பாக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் முன்பு நவ.7-ம் தேதி மாலை 3 மணிக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க தீபாவுக்கு, செய்தித்துறை செயலர் நோட்டீஸ் அனுப்பினார். இதன்படி, நேற்று மாலை தீபாவின் வழக்கறிஞர் தொண்டன் சுப்பிரமணியன் தலைமைச் செயலர் முன்பு ஆஜராகி, தீபா தரப்பு விளக்கத்தை அளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT