Published : 06 Nov 2017 10:16 AM
Last Updated : 06 Nov 2017 10:16 AM

மதுராந்தகம் ஏரிக்கு 500 கன அடி நீர்வரத்து: உயர்கல்வித்துறை அமைச்சர் தகவல்

காஞ்சிபுரம் மாவட்டத்தின் பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி அதன் நீர் பிடிப்பு பகுதிகளில், கனமழை பெய்து வருவதால் வேகமாக நிரம்பி வருகிறது. 23 அடி உயரம் கொண்ட ஏரியில் தற்போது 21.6 அடிக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது.

இந்நிலையில், ஏரியை உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் மற்றும் போக்குவரத்து அமைச்சர் எம்ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பழகன் கூறும்போது, “மதுராந்தகம் ஏரி தற்போது 21.6 அடியை எட்டியுள்ளது. தற்போது விநாடிக்கு 500 கன அடி நீர்வரத்து உள்ளது. எனவே ஏரி முழுமையாக நிறைவதற்கு ஒரு சில நாட்களாகும். மேலும், முதற்கட்டமாக கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்றார். மாவட்ட ஆட்சியர் பொன்னையா உடனிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x