Published : 02 Nov 2017 08:12 PM
Last Updated : 02 Nov 2017 08:12 PM

வியாழன் இரவு முழுவதும் மழை நின்று விளையாடப் போகிறது- தமிழ்நாடு வெதர்மேன்

 

வியாக்கிழமை (2.11.2017) இரவு முழுவதும் மழை 'நின்று விளையாடப் போகிறது', நாம் தூங்கினாலும் மழை விழித்திருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தன் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை வலுவாக பெய்து வரும் சூழலில் பிரதீப் ஜான் தன் முகநூலில் வெளியிட்ட பதிவில், ''வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னையில் இன்று மாலை வரை நன்கு வெயில் அடித்த நிலையில், அதன்பின் பரவலாக மழைபெய்து வருகிறது. இனி, இரவு நேரத்தில் மழை தீவிரமாகும்.

வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, ஓ.எம்.ஆர்., கிழக்கு கடற்கரை சாலை ஆகிய பகுதிகளில் மழை தொடங்கிவிட்டது, நேரம் செல்லச் செல்ல வலுவாக பெய்யும்.

ஒருபுறம் வட சென்னையில் இருந்து மேகங்கள் நகர்ந்தும், மற்றொருபுறம் மேற்குகில் இருந்து நகர்வதால், நேற்று இரவுபோல் லேசான மழையாக இல்லாமல், இரவு முழுவதும் மழை 'நின்று விளையாடப் போகிறது', நாம் தூங்கினாலும் மழை விழித்திருக்கும்'' என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x