Published : 10 Nov 2017 10:14 AM
Last Updated : 10 Nov 2017 10:14 AM

பராமரிப்பு பணி காரணமாக மின் ரயில் சேவையில் இன்றுமுதல் மாற்றம்

சென்னை கடற்கரை உள்ளிட்ட 3 ரயில் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளதால், இன்று முதல் 2 வாரங்களுக்கு மின்சார ரயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிபில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னை கடற்கரை, வண்ணாரப்பேட்டை, ராயபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் ரயில் பாதையில் இன்று (10-ம் தேதி) முதல் 24-ம் தேதி வரை பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளன. இதனால், மேற்கண்ட நாட்களில் மின்சார ரயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மூர்மார்க்கெட் வளாகம்

அதன்படி, கும்மிடிப்பூண்டியில் இரவு 9.40 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் சென்னை கடற்கரைக்குச் செல்லாது. அதற்கு பதிலாக கொருக்குப்பேட்டை, பேசின்பிரிட்ஜ் வழியாக மூர்மார்க்கெட் வளாகத்துக்குச் செல்லும்.

இதேபோல, சென்னை கடற்கரையில் இருந்து அதிகாலை 1.20 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லவேண்டிய மின்சார ரயில் மூர்மார்க்கெட் வளாகத்தில் இருந்து இயக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x