Published : 01 Nov 2017 11:20 AM
Last Updated : 01 Nov 2017 11:20 AM

மாட்டுத்தாவணி பஸ் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்

மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்துக்கு மாநகராட்சி நிர்வாகம் எம்ஜிஆர் பெயரை சூட்டி பெயர் பலகையை வைத்தது.

சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு அடுத்து, மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையம் பெரியது. இந்த பஸ் நிலையத்தை 1999 மே 25-ம் தேதி அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்துவைத்தார்.

இந்த பஸ் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயரை சூட்ட வேண்டும் விவி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏ முதல்வரிடம் தொடர்ந்து வலியுறுத்தினார். அதனால், மதுரை எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாட்டுத்தாவணி பஸ் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் என அறிவித்தார். ஆனால், அந்த அறிவிப்பு செயல்பாட்டுக்கு வரவில்லை. அதிருப்தியடைந்த விவி.ராஜன் செல்லப்பா, முதல்வரிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து, முதல்வர் மாட்டுத்தாவணி பஸ் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர் பலகை வைக்க உத்தரவிட்டார். அதன்படி, நேற்று மாநகராட்சி அதிகாரிகள் எம்ஜிஆர் பெயரை சூட்டி அதற்கான பெயர் பலகையை வைத்தனர்.

இதுகுறித்து ராஜன் செல்லப்பா எம்எல்ஏ கூறுகையில், மாட்டுத்தாவணி பஸ் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர் சூட்ட வேண்டும் என்ற அதிமுகவின ரின் நீண்ட நாள் கனவை எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றியுள்ளார். அவருக்கு நன்றி என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x