Published : 26 Nov 2017 10:25 AM
Last Updated : 26 Nov 2017 10:25 AM
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் இருந்து நேற்று முன்தினம் ஏராளமான பைபர் படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். கோடியக்கரைக்கு கிழக்கே இந்திய கடற்பகுதியில் நேற்று முன்தினம் மாலை மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு 2 படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், நாகப்பட்டினம் செருதூரைச் சேர்ந்த ராஜேந்திரன், பாலு, புவனேஷ் ஆகிய 3 பேரின் படகுகளை மறித்து அதில் இருந்த 12 மீனவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர்.
அதைத்தொடர்ந்து, 3 படகுகளிலும் இருந்த ஜிபிஎஸ் கருவிகள், மீன்கள், வலைகள் உள்ளிட்டவற்றை பறித்துக்கொண்டு மீனவர்களை அச்சுறுத்தி விரட்டியடித்தனராம். பறிமுதல் செய்யப்பட்ட மீன்கள், வலைகள் உள்ளிட்டவற்றின் மொத்த மதிப்பு ரூ.1 லட்சம் என்று மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த தாக்குதலையடுத்து 3 படகுகளிலும் இருந்த மீனவர்கள் அனைவரும் வெறும் கையுடன் நேற்று காலை கரைக்குத் திரும்பினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT