Published : 26 Nov 2017 10:25 AM
Last Updated : 26 Nov 2017 10:25 AM

தமிழக மீனவர் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் இருந்து நேற்று முன்தினம் ஏராளமான பைபர் படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். கோடியக்கரைக்கு கிழக்கே இந்திய கடற்பகுதியில் நேற்று முன்தினம் மாலை மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு 2 படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், நாகப்பட்டினம் செருதூரைச் சேர்ந்த ராஜேந்திரன், பாலு, புவனேஷ் ஆகிய 3 பேரின் படகுகளை மறித்து அதில் இருந்த 12 மீனவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர்.

அதைத்தொடர்ந்து, 3 படகுகளிலும் இருந்த ஜிபிஎஸ் கருவிகள், மீன்கள், வலைகள் உள்ளிட்டவற்றை பறித்துக்கொண்டு மீனவர்களை அச்சுறுத்தி விரட்டியடித்தனராம். பறிமுதல் செய்யப்பட்ட மீன்கள், வலைகள் உள்ளிட்டவற்றின் மொத்த மதிப்பு ரூ.1 லட்சம் என்று மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த தாக்குதலையடுத்து 3 படகுகளிலும் இருந்த மீனவர்கள் அனைவரும் வெறும் கையுடன் நேற்று காலை கரைக்குத் திரும்பினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x