Published : 28 Nov 2017 04:36 PM
Last Updated : 28 Nov 2017 04:36 PM
என்னிடம் கூறிவிட்டே 3 எம்.பி.க்கள் அணிமாறினார் என டிடிவி தினகரன் கூறுவது 21ஆம் நூற்றாண்டின் சிறந்த ஜோக் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கிண்டல் செய்துள்ளார்.
இரட்டை இலை சின்னம் ஈபிஎஸ்- ஓபிஎஸ் அணிக்கு ஒதுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது, இதனால் தினகரன் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. இந்நிலையில் தினகரன் அணியிலிருந்த ராஜ்ய சபா எம்.பி.க்கள் விஜிலா சத்யானந்த், கோகுல கிருஷ்ணன், நவநீதகிருஷ்ணன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவினர்.
இது குறித்து இன்று திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறிய டிடிவி தினகரன், ''எடப்பாடி அணிக்கு தாவிய மூன்று எம்.பி.க்களும் என்னிடம் சொல்லிவிட்டுத்தான் அங்கு சென்றனர். எங்கே தகுதிநீக்கம் செய்யப்பட்டுவிடுவோமோ என்ற அச்சத்தில்தான் அவர்கள் அங்கு சென்றனர்" என்று கூறினார்.
டிடிவி தினகரன் இப்படி பதில் அளித்திருப்பது 21-ம் நூற்றாண்டின் சிறந்த ஜோக் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கிண்டல் செய்துள்ளார். இது தொடர்பாக செல்லூர் ராஜூ தன் ட்விட்டர் பக்கத்தில், ''என்னிடம் கூறிவிட்டே 3 எம்.பி.க்கள் அணிமாறினார் என டிடிவி கூறுவது 21ஆம் நூற்றாண்டின் சிறந்த ஜோக்'' என்று பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT