Published : 04 Nov 2017 04:41 PM
Last Updated : 04 Nov 2017 04:41 PM

சென்னையில் வடியாத மழைநீர்: விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானம் பாதிப்பு

வடகிழக்கு பருவமழை காரணமாக, மூன்று நாட்கள் பெய்த கனமழையால் சென்னையில் பெரும்பாலான இடங்கள் மழைநீரால் சூழ்ந்தது. இதில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்குள் வெள்ள நீர் புகுந்தது.

வடகிழக்கு பருவமழை துவங்கியதை அடுத்து இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தழ்வு நிலை நிலைகொண்டுள்ளது. இதனால் கடந்த நான்கு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சரியான வடிகால் வசதிகள் இல்லாததால் மழைநீர் குடியிருப்புகளுக்குள் புகுந்தது.

சென்னையின் புறநகர் பகுதியில் மழைநீர் வெள்ளம் போல் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நிற்பது ஒருபக்கம் என்றால் சென்னையின் பிரதான பகுதிகளான புரசைவாக்கம், ஓட்டேரி, புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளிலும் தேங்கிய மழைநீர் வடியவில்லை.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உள்ளது. இங்குதான் தமிழகத்தின் விளையாட்டு வீரர்கள் பயிற்சி மற்றும் அனைத்து மாவட்டங்களை ஒருங்கிணைப்பது போன்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் முக்கிய தலைமை அலுவலகம் ஆகும்.

விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பின்புறம் பெரிய விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் ஓட்டப்பயிற்சி, கால்பந்து, கூடைப்பந்து, வாலிபால் உள்ளிட்ட அனைத்து வகையான விளையாட்டுகளுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

தற்போது பெய்த மழையில் இந்த மைதானம் முழுதும் மழை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. வெள்ள நீர் வடியாமல் தேங்கி நிற்பதால் விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெற மாதக்கணக்கில் ஆகும் என தெரிகிறது. நீரை வெளியேற்ற எந்தப் பணியும் நடக்கவில்லை என அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.

இதே போல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இரண்டடுக்கு மேல் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் இங்கு எந்த நிகழ்ச்சியும் நடக்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x