Published : 20 Nov 2017 10:14 AM
Last Updated : 20 Nov 2017 10:14 AM

கருணாநிதிக்கு கண்ணாடி மாற்றம்

மருத்துவர்களின் அறிவுரைப்படி திமுக தலைவர் கருணாநிதிக்கு கண்ணாடி மாற்றப்பட்டுள்ளது.

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஓராண்டாக கருணாநிதி வீட்டிலேயே சிகிச்சை பெற்று ஓய்வெடுத்து வருகிறார். காவேரி மருத்துவமனை சிறப்பு மருத்துவக் குழு அவரை கவனித்து வருகிறது.

இந்நிலையில் தடிமனான கருப்புக் கண்ணாடி, நரம்புகளை அழுத்தி ரத்த ஓட்டத்தை பாதிப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். எனவே, எடை குறைந்த மெல்லிய கண்ணாடியை அணிய ஆலோசனை கூறினர்.

அதன்படி கருணாநிதியை பரிசோதித்த கண் மருத்துவ நிபுணர்கள், எடை குறைந்த மெல்லிய கண்ணாடியை தயாரித்து அளித்தனர். இது கருணாநிதிக்கு நேற்று அணிவிக்கப்பட்டது.

கண்ணில் ஏற்பட்ட குறைபாட்டுக்காக 1971-ல் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர், கருப்பு கண்ணாடி அணியத் தொடங்கினார். இதுவே பின்னர் அவரது அடையாளமானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x