Published : 18 Jul 2023 02:04 PM
Last Updated : 18 Jul 2023 02:04 PM

“உம்மன் சாண்டி ஓர் உண்மையான மக்கள் தலைவர்” - முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி

முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை: பொது சேவைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த ஓர் உண்மையான மக்கள் தலைவர் உம்மன் சாண்டி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

கேரள மாநில முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான உம்மன் சாண்டி மறைவையொட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "கேரள மாநில முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான உம்மன் சாண்டிக்கு இறுதி மரியாதை செலுத்தினேன். அவர் ஒரு சிறந்த அரசியல் ஆளுமை மற்றும் பொது சேவைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு உண்மையான மக்கள் தலைவர். உம்மன் சாண்டியின் குடும்பத்தினருக்கும், கேரள மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அதில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x