Published : 10 Nov 2017 07:04 PM
Last Updated : 10 Nov 2017 07:04 PM
தமிழகம் முழுதும் இரண்டாம் நாளாக தொடரும் வருமான வரிச்சோதனையில் இன்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் உதவியாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சசிகலா உறவினர் வீடுகளில் வருமானவரி சோதனை 2-வது நாளாக இன்றும் தொடர்கிறது. 'ஆபரேஷன் கிளீன் பிளாக்மணி' என்ற சோதனை நேற்று காலை 5.30 மணிக்கு தொடங்கியது. 1800 அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த சோதனை, சென்னை, திருச்சி, தஞ்சாவூர், மன்னார்குடி உள்பட தமிழகத்தில் 187 இடங்களில் சோதனை நடைபெற்றது.
இரண்டாவது நாளான இன்று 147 இடங்களில் சோதனை தொடர்கிறது. 215 சொத்துகள், 350 நபர்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் இன்று அடுத்தகட்டமாக தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் உதவியாளர் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வனின் உதவியாளர் கனகராஜ் வீடு கம்பத்தில் உள்ளது. கனகராஜ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT