Published : 13 Jul 2023 06:51 AM
Last Updated : 13 Jul 2023 06:51 AM

தமிழ்நாடு உயர் திறன் மேம்பாட்டு மையம் 10 ஆயிரம் வேலைகளை உருவாக்க திட்டம்

கோப்புப்படம்

சென்னை: தமிழ்நாடு உயர் திறன் மேம்பாட்டு மையம் 10,000 வேலைகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

இது குறித்து நான் முதல்வன் திட்டத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எம்.ஜெயப்பிரகாசன் கூறுகையில், “நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 2022-23 நிதி ஆண்டில் 800-க்கும் மேற்பட்ட கல்லூரிகள், உயர்கல்வி நிறுவனங்களில் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. வங்கி, நிதி சேவை, காப்பீட்டுத் துறையில் 10,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு திறன் சார்ந்த படிப்புகளை படித்துள்ளனர். அவற்றில் 4000-க்கும் மேற்பட்டவர்கள் வேலையில் சேர்ந்துள்ளனர். தமிழ்நாட்டை திறன்களின் தலைநகரமாக தமிழ்நாட்டை மாற்றுவதே தமிழ்நாடு அரசின் நோக்கம்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x