Published : 13 Jul 2023 04:43 AM
Last Updated : 13 Jul 2023 04:43 AM

கருணாநிதி புகழை சொல்லும் நூலகம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: மதுரையில் கலைஞரின் புகழை உரக்கச் சொல்லும் நூற்றாண்டு நூலகம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் சங்கத் தமிழ்க் கவிதைகளுக்கு தன் தங்கத் தமிழ் வரிகளால் அணி சேர்த்த கருணாநிதியின் பெயரில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை ஜூலை 15-ம் தேதி காமராஜரின் பிறந்த நாளில் திறந்து வைக்கிறேன். கருணாநிதியின் நூற்றாண்டில் இதுவரை அமைக்கப்பட்ட மருத்துவமனை, நூலகம், கோட்டம் ஆகியவையும் இன்னும் அமையவிருப்பவையும் காலம் கடந்து நிற்கும். மக்களுக்கு என்றென்றும் பயன்தரும். கருணாநிதியின் புகழை உரக்கச்சொல்லும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x