Published : 25 Oct 2017 06:08 PM
Last Updated : 25 Oct 2017 06:08 PM

கடைகளில் புகையிலை விற்பனை: புற்றுநோய் மருத்துவமனை இயக்குநர் தலைமைச் செயலரிடம் 3 கோரிக்கை

தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்யநாதனை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இயக்குனர் டாக்டர்.சாந்தா சந்தித்து புகையிலை விற்பனை குறித்து 3 கோரிக்கைகளை வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அடையார் புற்றுநோய் மருத்துவமனையின் துணை இயக்குநர் ஹேமந்த், தலைமைச் செயலாளரிடம் புகையிலை தொடர்பாக வைக்கப்பட்ட 3 கோரிக்கைகள் பற்றி தெரிவித்தார்.

தங்கள் தரப்பு கோரிக்கையாக 1.புகையிலை விற்கும் கடைகளில் புகையிலை மட்டுமே விற்க வேண்டும், குழந்தைகளுக்கான தின்பண்டங்களை விற்கக் கூடாது. புகையிலையை அதற்கான ஆவணத்துடன்தான் விற்க வேண்டும்.

2. புகையிலை நிறுவனங்கள் சுகாதார நிறுவனங்களின் எந்த வித நிகழ்ச்சிகளுக்கும் உதவி செய்யக் கூடாது.

3. சமூக செயல்பாடுகள் மூலம் எந்த ஒரு செயலையும் இந்த நிறுவனங்கள் செய்யக்கூடாது என்ற மூன்று கோரிக்கைகளை வைத்ததாக தெரிவித்தார்.

அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக தலைமைச் செயலாளர் தெரிவித்ததாக அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x