Published : 24 Oct 2017 09:26 PM
Last Updated : 24 Oct 2017 09:26 PM
நடிகர் விஷால் வீட்டில் ஜிஎஸ்டி தொடர்பாக நடந்த ரெய்டு என்பது மத்திய அரசின் மிட்டல் போக்கை காட்டுகிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் அவர் இன்று செய்தியாளர் களிடம் கூறுகையில், ''நெல்லையில் கந்துவட்டி பாதிப்புக்கு புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததே இசக்கி என்ற தொழிலாளி குடும்பத்தினருடன் தீக்குளித்து தற்கொலை செய்தார். இதற்கு காரணமாக காவல் துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். சம்பந்தப்பட்ட போலீஸாரை இடைநீக்கம் செய்யவேண்டும். நீதிபதி தலைமையில் துரித விசாரணை நடத்தவேண்டும்.
நடிகர் விஷால் வீட்டில் ஜிஎஸ்டி தொடர்பாக நடந்த ரெய்டு என்பது மத்திய அரசின் மிட்டல் போக்கை காட்டுகிறது. இதில் பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு பெரும்பங்கு உண்டு'' என்றார் வைகோ.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT