Published : 31 Oct 2017 09:36 AM
Last Updated : 31 Oct 2017 09:36 AM

அரசு ஊழியருக்கு நவ.20-க்குள் நிலுவைத்தொகை

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் அக்டோபர் 1 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, அக்டோபருக்கான ஊதியத்தை நவம்பரில் பெறும்போது ஊதிய உயர்வுடன் பெற வேண்டும்.

இந்நிலையில், நிதித்துறைச் செயலர் கே.சண்முகம் நேற்று வெளியிட்ட அரசாணையில், ‘நவம்பர் 20-க்குள், அக்டோபருக்கான புதிய ஊதிய நிலுவைத்தொகையை அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் அலுவலர்கள் கணக்கிட்டுப் பெற்று வழங்க வேண்டும். நவம்பர் சம்பளத்தை டிசம்பரில் வழங்கும்போது, புதிய சம்பளம் வழங்கப்பட வேண் டும்’ என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x