Published : 23 Sep 2017 09:00 AM
Last Updated : 23 Sep 2017 09:00 AM
சென்னை ஐஐடி மாணவர் பிரேம் அவினாஷ் (21). விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர். சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டவர், ஐஐடி கிளினிக்கில் சிகிச்சை பெற்றார். மேல்சிகிச்சைக்காக, வேளச் சேரி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு டெங்கு காய்ச்சல் என தெரியவந்தது. சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
சிறுவன் உயிரிழப்பு
சூளைமேடு பெரியார் பாதையைச் சேர்ந்த கந்தசாமி மகன் முனீஸ் (13), நேற்று மாலை பட்டம் விட, மொட்டை மாடியில் ஏறியுள்ளார். கால் தவறி கீழே விழுந்தவர், மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT