Published : 14 Oct 2017 08:55 AM
Last Updated : 14 Oct 2017 08:55 AM
நெல்லை தூத்துக்குடி நாடார் மகிமை பரிபாலன சங்கம் மற்றும் பள்ளியில் பண மோசடி நடந்ததாக இரு தரப்பினர் கொடுத்துள்ள புகாரின்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.
நெல்லை தூத்துக்குடி நாடார் மகிமை பரிபாலன சங்கத்தின் தலைவர் பத்மநாபன், செயலாளர் சந்திரன் ஜெயபால், பொருளாளர் மாரித்தங்கம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில், எங்கள் சங்கம் நடத்தி வரும் கொட்டிவாக்கம் நெல்லை நாடார் மெட்ரிக், ராமச்சந்திரா பப்ளிக் பள்ளிகளின் தாளாளராக கடந்த 8 ஆண்டுகளாக இருந்த வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, ரூ.13 கோடி மோசடி செய்திருப்பதாக கூறப்பட்டிருந்தது.
இதை மறுத்துள்ள ஏ.எம்.விக்கிரமராஜா, சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு கொடுத்தார். பின்னர் நிருபர்களிடம் கூறும்போது, நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கம் என்ற பெயரில் அறக்கட்டைளை தொடங்கி, சங்கத்தின் ரூ.500 கோடி சொத்துகளை இவர்கள் அபகரிக்க முயற்சிப்பதாகவும் தன் மீதான புகாரில் உண்மை இல்லை என்றும் கூறினார். இந்த புகார்களை மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு காவல் ஆணையர் அனுப்பி யுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT