Published : 20 Oct 2017 10:20 AM
Last Updated : 20 Oct 2017 10:20 AM

சென்னையில் அக்.29-ல் வீணை இசைப் போட்டி

சென்னையில் வருகிற 28-ம் தேதி வீணை இசைப் போட்டி நடைபெற உள்ளது. இதில் 20 வயதுக்கு உட்பட்ட இளம் கலைஞர்கள் கலந்துகொள்ளலாம்.

இதுதொடர்பாக ஸ்ரீ தியாக பிரம்ம கான சபாவின் கவுரவ செயலாளர் எஸ்.வி.எஸ். மணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கமலா சுப்பிரமணியன், வி.வி.சுப்பிரமணியன் ஐசிஎஸ் நினைவு அறக்கட்டளை சார்பில் இளம் கலைஞர் களுக்கான வீணை இசைப் போட்டி சென்னை தி.நகர் வாணிமகாலில் வருகிற 29-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. எஸ்.நடராஜன், சாவித்திரி நடராஜன் ஆகியோரால் ஏற்படுத்தப்பட்ட இந்த அறக்கட்டளையானது, திறமை வாய்ந்த இளம் வீணை இசைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்தப் போட்டியை நடத்துகிறது.

இப்போட்டியில், 20 வயதுக்கு உட்பட்ட இளம் கலைஞர்கள் கலந்துகொள்ளலாம். போட்டியில் பங்கேற்க விரும்புவோர் வாணி மகாலில் உள்ள ஸ்ரீ தியாக பிரம்ம கான சபா அலுவலகத்தை 044-28152166 என்ற எண்ணில் தொடர்புகொண்டு, தங்கள் பெயரை முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும் இப்போட்டி குறித்த கூடுதல் விவரங்களை அந்த அலுவலகத்தில் தெரிந்துகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x