Published : 09 Oct 2017 08:41 AM
Last Updated : 09 Oct 2017 08:41 AM

திருமுல்லைவாயலில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் பெண் பரிதாப பலி

திருமுல்லைவாயலில் பெண் ஒருவர் பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்தார்.

ஆவடி அருகே உள்ள திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்தவர் இமயவர்மன். கட்டுமானப் பணி ஒப்பந்ததாரரான இவரது மனைவி குணவதி(48). கடந்த 2 வாரங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். ஆகவே, அம்பத்தூர் பகுதியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அங்கு, ரத்தப் பரிசோதனை மேற்கொண்டதில் குணவதிக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.

தீவிர சிகிச்சை

பிறகு, குணவதி மேல் சிகிச்சைக்காக கடந்த மாதம் 27-ம் தேதி போரூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், குணவதி நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

திருமுல்லைவாயல் பகுதியில் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் பொது சுகாதார துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x