குப்பை சேரும் காசிமேடு கடல் பகுதி

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில் அகற்றப்படாமல் தேங்கி கிடக்கும் குப்பைகள்.படம்:எஸ்:சத்தியசீலன்.
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில் அகற்றப்படாமல் தேங்கி கிடக்கும் குப்பைகள்.படம்:எஸ்:சத்தியசீலன்.
Updated on
1 min read

சென்னை: காசிமேடு துறைமுகத்தில் குப்பைகள் அகற்றப்படாததால், கடல்வளம் பாதிக்கப்படுவதாக இந்து தமிழ் திசை நாளிதழின் உங்கள் குரல் சேவையைத் தொடர்பு கொண்டு பழனி என்ற வாசகர் தெரிவித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:சென்னை, காசிமேடு துறைமுகத்தில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான மீன்பிடி படகுகள் மூலம் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்கின்றனர் இதில், சிலர் ஆழ்கடலுக்கும், சிலர் அண்மைக் கடலுக்கும் சென்று மீன்பிடிக்கின்றனர். குறிப்பாக, தற்போது மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ளதால் ஆழ்கடலுக்கு மீனவர்கள் செல்வதில்லை. அண்மைக் கடலில்தான் மீன் பிடிக்கச் செல்கின்றனர்.
இந்நிலையில், காசிமேடு துறைமுகத்தின் கடற்கரைப் பகுதிகளில் ஏராளமான குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன. குறிப்பாக, பிளாஸ்டிக்குகள், கண்ணாடி பாட்டில்கள், தெர்மோகோல்கள் என குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன.

இதனால், கடலின் சுற்றுச்சூழல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கடல் வளம் பாதிக்கப்பட்டு, மீன்கள் இறக்கக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே, துறைமுகத்தில் சேர்ந்துள்ள குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தி கடல் வளத்தைப் பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து, துறைமுக அதிகாரிகளிடம் கேட்டபோது, காசிமேடு துறைமுக பகுதிகளில் சேரும் குப்பை அவ்வப்போது அகற்றப்பட்டு வரப்படுகிறது. எனினும், தொடர்ந்து அப்பகுதியில் குப்பை போடப்படுகிறது. அவற்றை தடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in