

தேசிய பங்குச்சந்தை குறியீடான நிப்டி-50 பட்டியலில் உள்ள நிறுவன பங்குகளை வைத்திருப்பதில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களை (எப்ஐஐ) உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (டிஐஐ) விஞ்சியுள்ளனர்.
இது நாட்டின் பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள ஒரு மிகப்பெரிய கட்டமைப்பியல் மாற்றத்தைக் குறிக்கிறது. மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபி முதலீடுகள், சில்லறை முதலீட்டாளர்களின் அதிகப்படியான பங்கேற்பு மற்றும் காப்பீடு மற்றும் ஓய்வூதிய நிதிகளின் நிலையான முதலீடுகள் ஆகியவற்றால் இந்த மாற்றம் சாத்தியமாகியுள்ளது.