Published : 17 Jun 2023 08:19 AM
Last Updated : 17 Jun 2023 08:19 AM

ப்ரீமியம்
பூவுலகு இன்று - 3 | கிரெட்டா(க்களின்) குரல் கேட்கிறதா?

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் விதமாகத் தேச அரசாங்கங்கள் அரசியல் ரீதியிலான நடவடிக்கைகளைத் தொடங்க வலியுறுத்தி, நான்கரை ஆண்டுகளுக்கு முன்பு ஸ்வீடன் நாடாளுமன்ற வாயிலில் ‘பள்ளி வேலைநிறுத்தப் போராட்ட’த்தைத் தொடங்கியவர், கிரெட்டா துன்பர்க். அப்போது அவருக்கு வயது 15. வாக்களிக்கும் வயதைக்கூட எட்டியிருக்காத நிலையில், முன்னுதாரணமற்ற ஒரு போராட்டத்தைத் தொடங்கிய கிரெட்டா, 251 வாரங்கள் தொடர்ந்த‘பள்ளி வேலைநிறுத்தப் போராட்ட’த்தைக் கடந்த வாரம் நிறைவுசெய்திருக்கிறார்.

‘எதிர்காலத்துக்கான வெள்ளிக்கிழமைகள்’ [Fridays For Future] என்கிற பெயரில் காலநிலை மாற்றம் சார்ந்த விழிப்புணர்வை முன்னெடுத்துவரும் கிரெட்டா, தற்போது பள்ளிப் படிப்பை நிறைவுசெய்துள்ளார். எனவே, ‘பள்ளி வேலைநிறுத்தம்’ என்கிற பெயரில் இனிப் போராட்டத்தைத் தொடர முடியாது என விளக்கமளித்துள்ள அவர், வெள்ளிக்கிழமைகளில் தன்னுடைய போராட்டம் வழக்கம்போல் தொடரும் என்று அறிவித்துள்ளார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x