

2025-26ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் கல்விக்காக ரூ.1,28,650 கோடி ஒதுக்கப்பட்டது. கடந்த ஆண்டைவிட இது 6.22% அதிகம். இதில் முக்கியமாக, அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளிலும் இணைய வசதியை உருவாக்குதல், 500 கோடி ரூபாய் மதிப்பில் கல்விக்கான செயற்கை நுண்ணறிவுச் சிறப்பு மையத்தை உருவாக்குதல் போன்றவை அறிவிக்கப்பட்டன.
பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) ஜனவரியில் வெளியிட்ட வரைவு விதிமுறைகளின்படி பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனத் தேடுதல் குழுவை வேந்தரான ஆளுநரே முடிவு செய்வார் என்கிற அறிவிப்புக்குத் தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன.
பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய வரைவு நெறிமுறைகளை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தித் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.