Last Updated : 20 Sep, 2022 10:20 AM

 

Published : 20 Sep 2022 10:20 AM
Last Updated : 20 Sep 2022 10:20 AM

சேதி தெரியுமா?

செப்.11: துபாயில் நடைபெற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை கோப்பையை வென்றது. இது இலங்கை வென்ற ஆறாவது கோப்பை.

செப்.12: நியூயார்க்கில் நடைபெற்ற அமெரிக்க ஓபன் மகளிர் ஒற்றையர் பட்டத்தை போலந்தின் இகா ஷ்வாடெக் வென்றார்.

செப்.13: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி ஓய்வு பெற்றதையடுத்து பொறுப்பு தலைமை நீதிபதியாக எம். துரைசாமி பொறுப்பேற்றார்.

செப்.14: இந்தியத் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் பதவி விலகியதை அடுத்து, இந்தியாவின் புதிய தலைமை வழக்கறிஞராக முகுல் ரோஹத்கி நியமியக்கப்பட்டார். ஏற்கெனவே இவர் 2014-17 வரை தலைமை வழக்கறிஞராக இருந்தவர்.

செப்.14: நரிக்குறவர்களைப் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் பிரிவின் கீழ் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

செப்.15: தமிழகத்தில் அரசுத் தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

செப்.15: 2022 லேவர் கோப்பைப் போட்டிக்குப் பிறகு டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக ரோஜர் ஃபெடரர் அறிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x