

நீட் வினாத்தாள் கசிவு, தேர்வுக் குளறுபடிகள் உள்ளிட்டவற்றைக் கண்டித்தும் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானைப் பதவி விலக வலியுறுத்தியும் ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’யைச் சேர்ந்த இளைஞர்களும் மாணவர்களும் தலைநகர் டெல்லியின் ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுக்கு ஆதரவாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மாணவர்களும் மாணவர் சங்கத்தினரும் போராட்டத்தில் இறங்கினர். இயல்பிலேயே போராட்டக் குணம் நிறைந்த பெண்கள், தங்கள் கல்வி உரிமைக்கான இந்தக் களத்திலும் துணிவோடு முன்னின்றனர். அதை உறுதிப்படுத்தும் காட்சிகளில் சில இவை.