

தூத்துக்குடியைச் சேர்ந்த எனக்கு திருவண்ணா மலையில் உள்ள ஒரு கிராமத்தில் 2006இல் அரசுப் பள்ளி ஆசிரியர் வேலை கிடைத்தது. அதுவரை திருவண்ணாமலைக்கு நான் சென்றதில்லை. ஒரு வெள்ளிக்கிழமை மாலையில் அங்கு சென்று பணி நியமன ஆணை பெற்று வீடு திரும்பினோம். சனி,
ஞாயிறு விடுமுறை. யாரையும் தெரியாத ஊருக்கு எப்படிச் செல்வது என்று ஒரே குழப்பம். இருந்தாலும் சென்றுவிட்டேன். பெண்கள் விடுதியில் இடமில்லை. என்ன செய்வதென்று திகைத்து நின்ற வேளையில், ஒரு முதியவர் என்னை லூர்துசாமி ஐயாவின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.