Published : 11 Feb 2024 08:07 AM
Last Updated : 11 Feb 2024 08:07 AM

ப்ரீமியம்
பெண் எனும் போர்வாள் - 19: காணாமல் போனவர்கள்

மீனா, பாத்திமா, கீதா, ஷாஜிதா, ஷெரின், பிரீத்தி, ஜென்ஸி… எந்தப் பெயர் வேண்டுமோ அதை வைத்துக்கொள்வோம். இவர்கள் இந்தியாவின் ஏதோவொரு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அல்லது உலகின் ஏதோவொரு நாட்டைச் சேர்ந்தவர்கள். அனைவருமே 9 முதல் 16 வயதுக்கு உள்பட்ட சிறுமியர்.

மீனாவுக்கு 14 வயது. வளர்ப்புத் தந்தையின் கொடுமை தாங்க முடியாமல் வீட்டை விட்டு வெளியேறினாள். ரயில் நிலையத்தில் மீனாவிடம் பேசிய பெண், மீனாவைப் பாலியல் விடுதி ஒன்றில் விட்டுவிட்டு மாயமாகிவிட்டார். அங்கே நாள் முழுக்க வீட்டு வேலைகளைச் செய்யும்படி வற்புறுத்தப்பட்ட மீனா, பாலியல் வன்முறைக்கும் ஆளாக்கப் பட்டாள். “இதைப் பற்றி அந்த விடுதி வார்டன்கிட்ட சொல்லியும் எந்தப் பலனும் இல்லை. விட்டமின் மாத்திரைன்னு சொல்லி எதையோ கொடுப்பாங்க. எனக்கு மயக்கம் வர்ற மாதிரி இருக்கும். அதுக்கு அப்புறம் எதுவுமே பேச முடியாம சோர்ந்து போயிடுவேன்” என்று சொல்லும் மீனா, பாலியல் விடுதியில் தன் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகளைத் தாள முடியாமல் தற்கொலை செய்துகொள்ள முயன்றாள். சிறு குழந்தைதானே. அப்படியாவது துயரிலிருந்து விடுபட மாட்டோமா என நினைத்தாள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x