Last Updated : 09 Nov, 2016 01:14 PM

 

Published : 09 Nov 2016 01:14 PM
Last Updated : 09 Nov 2016 01:14 PM

குழந்தைப் பாடல்: சின்னப் பையன்

கங்கை, யமுனை, சரஸ்வதி

கலக்கும் இடத்தில் உள்ளது,

எங்க நேரு பிறந்ததாம்

இனிய நகரம் அலகாபாத்.

வருவாய் மிகவும் உடையவர்;

வக்கீல் தொழிலில் சிறந்தவர்;

அருமை நேரு தந்தையார்;

அவரின் பெயரே மோதிலால்.

பண்பு மிகுந்த அம்மையார்;

பழகுதற்கு இனியவர்;

அன்பு மிக்க நேருவின்

அன்னை சொரூப ராணியாம்.

சின்ன வயதில் ஜவஹரைச்

செல்லமாக அனைவரும்

‘நன்னா’ என்றே அழைத்தனர்.

என்ன அர்த்தம் தெரியுமா?

சின்னப் பையன் என்பதை

‘நன்னா’ என்பர் இந்தியில்

சின்னப் பையன் வளர்ந்தனன்;

‘சிறந்த மனிதர்’ ஆயினன்!

(அழ. வள்ளியப்பாவின் ‘நேரு தந்த பொம்மை’ நூலில் இடம் பெற்ற ஒரு பாடல்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x