Published : 10 Jul 2019 11:02 AM
Last Updated : 10 Jul 2019 11:02 AM
நெருப்பு இல்லாமல் ஒரு காகிதத்தை உங்களால் எரிய வைக்க முடியாதா? முடியும். ஒரு சோதனை செய்து பார்த்துவிடுவோமா? (பெரியவர்கள் உதவியுடன் மட்டுமே இதைச் செய்ய வேண்டும்.)
என்னென்ன தேவை?
லென்ஸ் (பூதக்கண்ணாடி), காகிதம், தீக்குச்சி
எப்படிச் செய்வது?
# சூரிய வெளிச்சத்தில் ஒரு காகிதத்தை விரித்து வையுங்கள். அதன் மீது சூரிய ஒளி படுமாறு லென்ஸைப் பிடித்துக்கொள்ளுங்கள்.
# லென்ஸ் வழியே சூரியக் ஒளி ஒரு புள்ளியில் குவியும்.
# சிறிது நேரத்தில் காகிதத்திலிருந்து புகை வெளிவரத் தொடங்கும்.
# அடுத்து, அந்தக் காகிதத்தின் மீது தீக் குச்சியை எடுத்து வையுங்கள். இப்போது தீக்குச்சியின் மீது லென்ஸ் மூலம் சூரியக் கதிர்களைக் குவியுங்கள்.
# சிறிது நேரத்தில் தீக்குச்சி தானாக எரியும்.
காரணம்:
லென்ஸ் ஒளிக்கற்றைகளை ஒரு புள்ளியில் குவிக்கப் பயன்படுகிறது. சூரியக் கதிர்கள் ஒன்றாகக் குவியும் போது காகிதத்திலும் தீக்குச்சியிலும் வெப்பம் அதிகரித்து நெருப்பை உண்டாக்கிவிடுகிறது.
பயன்பாடு:
சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி சூரிய மின்சக்தியை உருவாக்கும் தகடுகளில் இந்த நுட்பமே பயன்படுத்தப்படுகிறது.ஓவியம்: வாசன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT