

சாதாரண காகிதத் தேநீர்க் கோப்பையில் சிந்துகிற, மீதமாகிற தேநீரை மையமாகக் கொண்டு ஏதாவது வரைய முடியுமா? முடியும் என்று காட்டியிருக்கிறார், சென்னையைச் சேர்ந்த ஒளிப்படக்கலைஞர் நந்தகுமார். காதல் முதல் தனிமைவரை பல்வேறு உணர்வுகளைத் தனது தேநீர்க் கோப்பை ஓவியங்கள் வழியே வெளிப்படுத்திப் பிரமிக்க வைக்கிறார் இந்த இளம் கலைஞர்.
கரோனாவுக்குப் பிறகு...
கரோனா காலம் பலருடைய திறமைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது. பொதுமுடக்கத்தில் முடங்கியிருந்த பலரும் பொழுது போக்காகத் தங்களுக்குள் ஒளிந்திருந்த திறமைகளை வெளிப்படுத்தத் தொடங்கினர். நந்தகுமாரும் அப்படித்தான்.
“2020இல் கரோனா காலத்தில் வீட்டில் முடங்கிக்கிடந்தேன். அப்போது கரோனா மேலும் பரவாமல் இருக்க ஹோட்டல் கடைகளில் கண்ணாடி டம்ப்ளருக்குப் பதிலாக ‘பேப்பர்’ கோப்பையில் தேநீர் வழங்கப்பட்டது.