10 ஆயிரம் பேரை உருவாக்கிய முன்னோடி: 61 ஆண்டு​ கால தேனீ வளர்ப்புப் பயணம்

10 ஆயிரம் பேரை உருவாக்கிய முன்னோடி: 61 ஆண்டு​ கால தேனீ வளர்ப்புப் பயணம்
Updated on
2 min read

‘தேன்’ என்று சொன்​னாலே குமரி மாவட்​டத்​தின் மார்த்​தாண்​டம் நினை​வுக்கு வரு​வதைத் தவிர்க்க முடி​யாது. இந்​தியா மட்​டுமின்​றி, வெளி​நாடு​களில் வாழும் ஆரோக்​கிய விரும்​பிகளாலும் ‘மார்த்​தாண்​டம் தேன்’ தனித்​து​வ​மாகப் போற்​றப்​படு​கிறது.

இந்​தப் புகழுக்​குக் பின்​னால் பல முன்னோடி விவ​சா​யிகளின் அயராத உழைப்பு ஒளிந்​திருக்​கிறது. மார்த்​தாண்​டம் தேனின் வரலாறு ஆங்​கிலேயர் ஆட்​சிக் காலத்​தில், 1883இல் திருச்​சி​யில் பாதிரி​யார் நியூட்​டன் என்​பவ​ரால் தேனீ வளர்ப்பு முறை அறி​முகப்​படுத்​தப்​பட்​டது. தேன் உற்​பத்​திக்கு மிக​வும் ஏற்ற இடமாக கன்​னி​யாகுமரி மாவட்​டத்​தின் மார்த்​தாண்​டம் பகுதி தேர்​வா​னது.

நீண்ட முயற்​சிக்​குப் பிறகு, 1919இல் ஒய்​.எம்​.சி.ஏ (YMCA) வாயி​லாக மார்த்​தாண்​டத்​தில் தேன் உற்​பத்தி முறைப்​படுத்​தப்​பட்​டது. அதன் தொடர்ச்​சி​யாக மார்த்​தாண்​டம், குலசேகரம், அரு​மனை, பேச்​சிப்​பாறை, திற்​பரப்பு மற்​றும் மலைக் கிராமங்​களில் ஆயிரக்​கணக்​கான விவ​சா​யிகள் தேன் உற்பத்​தி​யில் ஈடுபடத் தொடங்​கினர்.

81 வயதி​லும் தளராத உழைப்பு

மார்த்​தாண்​டம் தேனின் உற்​பத்​தி​யைப் பெருக்​கி, பல்​லா​யிரக்​கணக்​கானோருக்​குப் பயிற்சி அளித்த முன்னோடி விவ​சா​யிகளில் முக்​கிய​மானவர் குலசேகரம் அருகே உள்ள கொட்​டூரைச் சேர்ந்த பி.ஹென்றி (81). தமிழ்​நாடு தேனீ வளர்ப்​போர் விவ​சா​யிகள் சங்​கங்​களின் கவுர​வத் தலை​வ​ரான இவர், தனது 20 வயதிலேயே இத்​தொழிலில் கால்​ப​தித்​தார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in