Last Updated : 13 May, 2017 03:42 PM

 

Published : 13 May 2017 03:42 PM
Last Updated : 13 May 2017 03:42 PM

சேனல் சிப்ஸ்: பாட்டும் சண்டையும்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ள ‘யாரடி நீ மோகினி’ தொடரில் நாயகன் அவதாரம் எடுத்திருக்கிறார் சஞ்சீவ்.

“இந்த சீரியல்ல மோகினின்னு பெயர் வந்ததும் எல்லாரும் முழுக்க இது பேய் சீரியலாக இருக்குமோன்னு நினைக்கிறாங்க. ஆனா, இது அழகான குடும்பக் கதை. அந்தப் பயணத்துல மோகினியோட விஷயங்கள் கலந்திருக்கும். சினிமா மாதிரிதான் படப்பிடிப்பு நடந்துக்கிட்டிருக்கு. இப்பவே ஐந்து பாட்டு, ஒரு சண்டையை ஷுட் பண்ணிட்டோம். சண்டைக் காட்சிகள் எல்லாம் சினிமா ஸ்டண்ட் பயிற்சியாளர்களை வைத்து எடுக்குறோம். அதே மாதிரி பாட்டுங்க எல்லாம் ஏற்கெனவே சினிமாவில் ஹிட் அடித்த பாடல்களைத் தேர்வு செய்து 30 முதல் 40 வினாடிகள்வரை வைத்திருக்கோம். இந்தப் புதிய அணுகுமுறைக்கு நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு. என்னோட கேரியர்ல ‘திருமதி செல்வம்’ மாதிரி ஒரு பிரேக் கொடுக்குற தொடராக இது இருக்கும்!’’ என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் சஞ்சீவ்.



ஆபீஸ்ல மாட்டிப்பேன்!

தற்போது நடக்கும் அரசியல் திருப்பங்களைத் தனது முகநூலில் நகைச்சுவையான நிலைத்தகவல்களாகப் பகிர்ந்து, கவனம் ஈர்த்துவருகிறார் செய்தித் தொகுப்பாளினி திவ்யா. இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘நீலி’ தொடர் மூலம் நடிகையாகவும் பயணிக்கத் தொடங்கியுள்ளார்.

“நடப்பு அரசியல் நிகழ்வுகளை ஃபேஸ்புக்கில் ஜாலியாக கமெண்ட் அடிப்பதை அந்தக் கட்சி சார்ந்த பொறுப்பாளர்கள் சிலர், நான் வேலை பார்க்குற செய்தி சேனல் தலைமை நிர்வாகி வரைக்கும் அப்பப்போ புகார் சொல்வாங்க. ‘இனிமே செய்ய மாட்டேன்’ன்னு சார் கிட்ட அப்போதைக்கு தப்பித்துக்கொண்டாலும், என்னால் அடுத்தடுத்து பதிவிடாமல் இருக்க முடிவதில்லை. ஆனால், எப்போதுமே நான் தனிப்பட்டு யார் மனதையும் புண்படுத்தும்விதமான வார்த்தைகளை பதிவிட மாட்டேன்!’’ என்ற திவ்யாவிடம் “ஏன் திடீர்னு நடிப்புத் துறைக்கு மாறினீங்க?” என்று கேட்டால், ‘‘நான்கு வருஷம் ஆச்சு. ஒரே மாதிரி பொழுதுபோகுதேன்னு மனசுக்குத் தோணுச்சு. அதான் நடிப்புக்குள்ள வந்துட்டேன். இங்கே வந்ததுக்கு அப்புறம்தான் தெரியுது. அடடா... இதை ஏன் இவ்ளோ நாளா மிஸ் பண்ணியிருந்தோம்னு!’’ என்று சிரிக்கிறார் திவ்யா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x