Last Updated : 14 May, 2016 01:01 PM

 

Published : 14 May 2016 01:01 PM
Last Updated : 14 May 2016 01:01 PM

எப்போது நிறுத்தப் போகிறோம்?

உலக குடும்ப மருத்துவர் நாள்-மே 19

பலியானோர் கணக்கு!

# ஒவ்வோர் ஆண்டும் புகையிலை பயன்படுத்துவதால் உலகில் 60 லட்சம் பேர் பலியாகின்றனர். சிகரெட் மட்டுமல்லாமல் பீடி, நேரடி புகையிலை போன்ற மற்றப் பொருட்களும் இதற்குக் காரணமாக உள்ளன. இறப்பவர்களில் 83 சதவீதம் பேர் தற்போது புகைப்பவர்கள் அல்லது முன்னால் புகைத்தவர்கள்.

# இப்படி இறப்பவர்களில் 6 லட்சம் பேர் நேரடியாகப் புகைப்பவர்கள் அல்ல. புகை பிடிப்பவர்களுக்கு அருகில் இருப்பதாலேயே 17 சதவீதம் பேர் பலியாகிறார்கள். இப்படி 2004-ம் ஆண்டில் நேரடியாகப் புகைக்காமல் இறந்தவர்களில் 31 சதவீதம் பேர் குழந்தைகள்.

# 20-ம் நூற்றாண்டில் புகையிலைப் பயன்பாட்டால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10 கோடி பேர்.

# இதேபோலப் புகைபிடித்தல், புகையிலைப் பயன்பாடு தொடர்ந்து கொண்டிருந்தால், 21-ம் நூற்றாண்டில் இறக்கப் போகும் நபர்களின் எண்ணிக்கை 100 கோடியை எட்டும்.

# உலகில் இறக்கும் 10 பேரில் ஒருவர் புகை பிடிப்பதால் இறக்கிறார்.

# உலக இளைஞர்களில் நான்கில் மூன்று பேர் புகை பிடிப்பதன் காரணமாக ஏற்படும் இதயக் கோளாறாலேயே இறக்கிறார்கள்.

# புகை பிடிப்பவர்கள், புகை பிடிக்காதவர்களைவிட சராசரியாக இத்தனை ஆண்டுகள் முன்னதாகவே இறந்துபோகிறார்கள்: ஆண்கள் : 13.2 ஆண்டுகள் - பெண்கள்: 14.5 ஆண்டுகள்

# புகை பிடிப்பதால் மாரடைப்பு, பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு அதிகம். கை, கால்களுக்கு ஆக்சிஜன் செல்வதைப் புகை பிடிப்பது தடுப்பதால், உடல் ஊனம் ஏற்படலாம்.

# புகை பிடிப்பதால் வரும் எப்சீமியா என்னும் நோய் நுரையீரல் செயல்பாட்டு திறனைக் குறைக்கும். அடிக்கடி மூச்சுக்குழாய் அழற்சி ஏற்படும். விளைவாக நுரையீரல், இதயச் செயலிழப்பு ஏற்படலாம்.

# புகை பிடிக்காமல் இருப்பதால் சேமிக்கப்படும் பணத்தைக் கணக்கிட்டுப் பார்த்தால், எவ்வளவு பணத்தைப் புகைப்பதில் கொட்டுகிறோம் என்பது புரியும். ஏனென்றால், இன்றைக்கு மிகக் குறைந்த அளவு என்று வைத்துக் கொண்டாலும்கூட ஒரு சிகரெட்டின் விலை ரூ. 5-லிருந்து ரூ. 10 வரை.

# ஆண்டுதோறும் புகை பிடிப்பவர்களுக்கு அருகில் உள்ளவர்களுக்குக் கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக 3,000 பேர் நுரையீரல் புற்றுநோயாலும், 46,000 பேர் இதய நோய்களாலும் இறக்கின்றனர்.

# ஆச்சரியமாகத்தான் இருக்கிறது என்றாலும் புகையிலை பயன்பாடு காரணமாகவே உலக அளவில் உற்பத்தி இழப்பு அதிகமாக ஏற்படுகிறது. மதுப் பழக்கம், மருத்துவ அவசரகாலச் சிகிச்சைகளால் இழக்கப்படும் நேரத்தைவிட இதனால்தான் உற்பத்தி இழப்பு அதிகம்.

# ரோட்டில் போடப்படும் தார் சிகரெட்டில் அதிகம் இருக்கிறது. இது நுரையீரலில் படிகிறது, புற்றுநோய்க்குக் காரணமாக இருக்கிறது.

# ஒரு சிகரெட்டில் 4000 வேதிப்பொருட்கள் இருக்கின்றன. இவற்றில் 250 வேதிப்பொருட்கள் மோசமானவை. 50 வேதிப்பொருட்கள் புற்றுநோய்க் காரணிகள்.

# புகை பிடிப்பதால் மயக்கம் வரும், சுவையும் மணத்தையும் நன்றாக உணர முடியாது, மூச்சிளைப்பும் தொடர் இருமலும் ஏற்படும், உடல் எதிர்ப்புசக்தியை இழக்கும்.

# புகைப்பதால் உடலில் சேரும் கார்பன் மோனாக்சைடு உடலில் உள்ள ஆக்சிஜனை எடுத்துக்கொள்வதால் தசை, மூளை, உடல் திசுக்களும் குறிப்பாக இதயமும் கடுமையாக வேலை பார்க்க வேண்டி வரும். காலப்போக்கில் நுரையீரலுக்கு முழு சுவாசமும் செல்லாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x