Published : 15 Jul 2015 12:33 PM
Last Updated : 15 Jul 2015 12:33 PM

குழந்தைப் பாடல்: காமராஜர்!

அன்பு உள்ளம் கொண்டவர்

அருமை காமராஜராம்

எல்லாரும் படிக்கவே

ஏற்ற வழி செய்தவர்.

பள்ளி செல்லும் பிள்ளைகள்

கால் வலிக்க நடக்காமல்

பக்கத்திலே படித்திட

பள்ளிகளைத் திறந்தவர்.

படிக்கும் நல்ல பிள்ளைக்கு

மதிய உணவு தந்தவர்

ஒரே நிறத்தில் சீருடை

ஒன்றாய் அணியச் சொன்னவர்.

காந்தி வழி நின்றவர்

உத்தமராம் காமராஜர்

நினைவை என்றும் போற்றுவோம்

பிள்ளைகளே வாருங்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x