Published : 02 Apr 2018 10:49 AM
Last Updated : 02 Apr 2018 10:49 AM

சுஸுகி, டொயோடா ஒப்பந்தம்

போ

ட்டிகள் அதிகரிக்கும்போது கூட்டு சேர்ந்து போட்டிகளை எதிர்கொள்வது ஒரு வகை உத்தி. அந்த உத்தியைத்தான் இப்போது ஆட்டோமொபைல் உலகில் முன்னணியில் திகழும் சுஸுகி நிறுவனமும், டொயோடா நிறுவனமும் மேற்கொண்டுள்ளன.

இரு நிறுவனங்களும் கூட்டு சேர்ந்து தங்களது தயாரிப்புகளை மற்றவர் விற்பனையகத்தில் விற்பனை செய்ய ஒப்புக் கொண்டுள்ளன.

இதனால் மாருதி சுஸுகி விற்பனையகத்திற்கு சென்று டொயோடா காரை நீங்கள் வாங்க முடியும். அதேபோல டொயோடா விற்பனையகத்தில் டொயோடா தயாரிப்புகள் கிடைக்கும் என்று நினைத்தால் நீங்கள் ஏமாந்துபோவீர்கள். அங்கு மாருதி சுஸுகி கார்களும் விற்பனைக்குக் கிடைக்கும்.

சுஸுகி தயாரிப்பில் அதிகம் விற்பனையாகும் பலேனோ, விடாரா பிரீஸா உள்ளிட்ட கார்களை டொயோடா விற்பனையகத்தில் விற்க ஒப்புக் கொண்டுள்ளது.

அதேபோல டொயோடா தயாரிப்பில் முன்னணியில் விளங்கும் கொரெல்லோ கார்களை மாருதி சுஸுகி விற்பனையகங்களில் விற்கவும் ஒப்பந்தம் வழி செய்துள்ளது.

சர்வதேச அளவில் டொயோடா தயாரிப்புகள் முதலிடத்தில் உள்ளன. ஆனால் இந்தியாவில் மாருதி சுஸுகி வசம் சந்தை உள்ளது. இதை பகிர்ந்து கொண்டு தங்களது தயாரிப்புகளை அதிகம் விற்க இரு நிறுவனங்களும் இணைந்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x