Published : 26 Feb 2018 10:25 AM
Last Updated : 26 Feb 2018 10:25 AM
ம
ஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் அதிகம் விற்பனையாகாத பிராண்டுகள் தயாரிப்பை நிறுத்த முடிவு செய்துள்ளது. அந்த வகையில் வெரிடோ வைப், ஸைலோ நுவோஸ்போர்ட் ஆகிய மாடல் உற்பத்தியை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது.
இந்த இரு மாடல்களின் விற்பனை குறைந்து வருவது மட்டுமின்றி புதிய புகை சான்றுக்கு இவற்றை மேம்படுத்துவதை விட இந்த பிராண்டு உற்பத்தியைக் கைவிடுவது சிறந்தது என நிறுவனம் முடிவு செய்துள்ளது. பாரத் 6 புகை கட்டுப்பாட்டுக்கேற்ப 2020-லிருந்து வெளிவரும் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இத்தகைய புகை மாசு சான்றுக்கேற்ப வாகனங்களை மேம்படுத்துவது மிகுந்த செலவு பிடிக்கும். அதே சமயம் வாடிக்கையாளர் மத்தியில் இவ்விரு பிராண்டுகளும் பெருமளவு வரவேற்பைப் பெறவில்லை. இதனால் உற்பத்தியை நிறுத்துவது என்ற முடிவுக்கு நிறுவனம் வந்துள்ளது.
புதிய புகை சான்றுக்கு ஏற்ற வகையில் வாகனங்களை தயாரிக்க நிறுவனம் ரூ.900 கோடியை முதலீடு செய்கிறது. அத்துடன் புதிய எஸ்யுவி-க்களை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளது. மஹிந்திரா கேயுவி 100 முற்றிலும் பேட்டரியில் இயங்கும் வகையில் தயாராகிறது. இது இந்த ஆண்டுக்குள் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT