“தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை” - பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் வேதனை

“தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை” - பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் வேதனை
Updated on
2 min read

தரம்சாலா: ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் இரவு தரம்சாலாவில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் மும்பை இந்​தி​யன்ஸ் அணி 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் பஞ்​சாப் கிங்ஸ் அணியை தோற்​கடித்​தது. இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த பஞ்​சாப் அணி 20 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 200 ரன்​கள் குவித்தது. அதி​கபட்​ச​மாக பிரப்​சிம்​ரன் சிங் 57, அஸ்​மதுல்லா ஓமர்ஸாய் 38 ரன்​கள் சேர்த்​தனர். மும்பை அணி தரப்​பில் ஷர்துதல் தாக்​குர் 4 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார்.

201 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த மும்பை அணி 19.5 ஓவர்களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 205 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது. திலக் வர்மா 33 பந்​துகளில், 6 சிக்​ஸர்​கள், 6 பவுண்​டரி​களு​டன் 75 ரன்​களும், வில் ஜேக்ஸ் 10 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 2 பவுண்டரிகளு​டன் 25 ரன்​களும் விளாசி அணி​யின் வெற்​றி​யில் முக்​கிய பங்கு வகித்​தனர். பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை இழந்​து​விட்ட மும்பை அணிக்கு இது 4-வது வெற்றி​யாக அமைந்​தது.

அதேவேளை​யில் பஞ்​சாப் கிங்ஸ் அணி தொடர்ச்​சி​யாக 5-வது தோல்​வியை சந்​தித்​தது. அந்த அணி 12 ஆட்​டங்​களில் விளை​யாடி 6 வெற்​றி, 5 தோல்​வி, ஒரு முடிவு இல்​லாத ஆட்​டம் என 13 புள்ளிகளை பெற்று பட்​டியலில் 4-வது இடத்​தில் உள்​ளது. தொடர்ச்சி​யான தோல்வி​களால் பஞ்​சாப் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்​னேறு​வ​தில் சிக்​கல் எழுந்​துள்​ளது. அந்த அணி எஞ்சி​யுள்ள 2 ஆட்​டங்​களி​லும் வெற்றி பெற்​றாமல் மட்​டுமே பிளேஆஃப் சுற்​றுக்கு முன்​னேறு​வதற்​கான வாய்ப்பை பெற முடியும்.

பஞ்​சாப் அணி தனது அடுத்த ஆட்​டத்​தில் நாளை (17-ம் தேதி) ஆர்சிபி அணியை எதிர்​கொள்​கிறது. தொடர்ந்து தனது கடைசி லீக் ஆட்​டத்​தில் வரும் 23-ம் தேதி லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணியை சந்​திக்​கிறது பஞ்​சாப் கிங்ஸ் அணி. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதி​ரான தோல்விக்கு பின்​னர் பஞ்​சாப் கிங்ஸ் அணி​யின் கேப்​டன் ஸ்ரேயஸ் ஐயர் கூறிய​தாவது: நிச்சயமாக, இது ஜீரணிக்க முடி​யாத கடின​மான தோல்​வி​தான். ஆனால், இதற்​காக நான் எந்​தவொரு குறிப்​பிட்ட சூழலை​யும் சுட்டிக்​காட்ட விரும்​ப​வில்​லை. ஏனெனில், இது சிறந்த கிரிக்​கெட் போட்​டி. இரு அணி​களும் மிகச்​சிறப்​பாகப் போராடினோம்.

திலக் வர்மா அற்​புத​மாக விளை​யாடி​னார், பந்​துகளைத் தேர்ந்​தெடுத்து அடித்த விதம் அரு​மை, மேலும் ஃபீல்​டிங்​கிற்கு ஏற்​ற​வாறு பந்​துகளை லாவக​மாக திசை திருப்பி விளை​யாடி​னார். எனவே இந்த வெற்​றிக்கு அவர் தகு​தி​யானவர், பேட்​டிங்​கின் போது நாங்கள் ஒரு கட்​டத்​தில் 170 முதல் 180 ரன்​கள் வரை மட்​டுமே எடுப்​போம் என்று தோன்​றியது. ஆனால், அங்​கிருந்து அஸ்மதுல்லா ஓமர்​ஸாய் ஆட்​டத்​தின் போக்கை அப்​படியே எங்களுக்கு சாதக​மாக மாற்​றி​னார்.

அவர், ஸ்கூப் ஷாட்​கள் மூலம் சிக்​ஸர்​களைப் பறக்​க​விட்​டார். 16 அல்​லது 17-வது ஓவரிலிருந்து எங்​களுக்​குக் கிடைத்த வேகம் காரண​மாகவே 200 ரன்​களை எட்​டினோம். ஆர்​சிபி அணிக்கு ஏதிராக அடுத்து நடை​பெற உள்ள ஆட்​டத்தை ஆவலுடன் எதிர்​நோக்கி உள்​ளோம். இந்த போட்டி பிற்​பகலில் நடை​பெறுகிறது. எஞ்​சி​யுள்ள 2 போட்​டிகளி​லும் நாங்​கள் கண்​டிப்​பாக வெற்றி பெற்றாக வேண்​டும். அந்த இரண்டு போட்​டிகளும் மிக​வும் விறுவிறுப்​பாக அமை​யும்​. இவ்​வாறு ஸ்ரேயஸ்​ ஐயர்​ கூறி​னார்.

“தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை” - பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் வேதனை
நாம் கடின காலத்துக்கு தயாராக வேண்டுமா? - எரிபொருள் விலை உயர்வும் தாக்கமும்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in