

கோப்புப் படம்
புதுடெல்லி: உலக கால்பந்து சம்மேளன (பிபா) நடுவர்களாக இந்தியாவைச் சேர்ந்த 3 பேர் தேர்வாகியுள்ளனர்.
இதுதொடர்பாக அகில இந்திய கால்பந்து சம்மேளனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: குஜராத்தை சேர்ந்த ரச்சனா கமானி, புதுச்சேரியைச் சேர்ந்த அஸ்வின் குமார், டெல்லியைச் சேர்ந்த ஆதித்யா புர்கயஸ்தா ஆகியோர் பிபா நடுவர்களாக தேர்வாகியுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் முரளிதரன் பாண்டுரங்கன்(புதுச்சேரி), பீட்டர் கிறிஸ்டோபர் (மகாராஷ்டிரா) ஆகியோர் பிபா உதவி நடுவர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.