

டோக்கியோ: ஜப்பானின் டோக்கியோ நகரில் ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் 12-ம்நிலை வீராங்கனையும், ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்றவருமான இந்தியாவின் பி.வி.சிந்து, முன்னாள் உலக சாம்பியான ஜப்பானின் நோஸாமி ஒகுகராவுடன் நேற்று மோதுவதாக இருந்தது.
ஆனால் கடைசி நேரத்தில் ஒகுகரா போட்டியில் இருந்து விலகினார். இதனால் பி.வி.சிந்து அரை இறுதிக்கு முன்னேறினார். அரை இறுதி சுற்றில் பி.வி.சிந்து, டோக்கியோ ஒலிம்பிக் சாம்பியனான சீனாவின் சென் யுஃபெய்-யுடன் மோதுகிறார்.