

ஹாமில்டன்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றது.
ஹாமில்டன் நகரில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 36.2 ஓவர்களில் 161 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ராஸ்டன் சேஸ் 38, ஜான் கேம்பல் 26, ஹாரி பியர் 22, ஷெர்பேன் ரூதர்போர்டு 19, அக்கீம் அகஸ்டே 17, கேப்டன் ஷாய் ஹோப் 16 ரன்கள் சேர்த்தனர். நியூஸிலாந்து அணி தரப்பில் மேட் ஹென்றி 4 விக்கெட்களையும் ஜேக்கப் டஃபி, மிட்செல் சாண்ட்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
161 ரன்கள் இலக்குடன் பேட் செய் நியூஸிலாந்து அணி 30.3 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மார்க் சாப்மேன் 63 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 64 ரன்களும், மைக்கேல் பிரேஸ்வெல் 31 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 40 ரன்களும் விளாசினர். 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றி கோப்பையை வென்றது. அந்த அணி முதல் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றிருந்தது.