தென் ஆப்பிரிக்காவுடன் முதல் ஒருநாள் போட்டியில் இன்று மோதல்: பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்தியா

தென் ஆப்பிரிக்காவுடன் முதல் ஒருநாள் போட்டியில் இன்று மோதல்: பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்தியா
Updated on
3 min read

ராஞ்சி: இந்​தியா - தென் ஆப்​பிரிக்கா அணி​கள் இடையி​லான முதல் ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி ராஞ்​சி​யில் இன்று பிற்​பகல் 1.30 மணிக்கு நடை​பெறுகிறது.

தென் ஆப்​பிரிக்க கிரிக்​கெட் அணி இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து விளையாடி வரு​கிறது. இரு அணி​கள் இடையி​லான 2 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரை தென் ஆப்​பிரிக்க அணி முழு​மை​யாக 2-0 என கைப்​பற்​றியது.

இதன் மூலம் 25 ஆண்​டு​களுக்கு பிறகு இந்​திய அணி​யில் முழு​மை​யாக டெஸ்ட் தொடரை வென்று அந்த அணி சாதனை படைத்​திருந்​தது. இந்​நிலை​யில் டெஸ்ட் தொடரை அடுத்து இரு அணி​களும் 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டித் தொடரில் மோத உள்​ளன.

இதன் முதல் ஒரு​நாள் போட்டி ராஞ்​சி​யில் உள்ள ஜேஎஸ்​சிஏ சர்​வ​தேச மைதானத்​தில் இன்று நடை​பெறுகிறது. டெஸ்ட் தொடரை இழந்​துள்ள இந்​திய அணி ஒரு​நாள் போட்​டித் தொடரில் வெற்றிகளை குவிக்க வேண்​டும் என்ற நெருக்​கடி​யுடன் களமிறங்கு​கிறது.

மேலும் 2027-ம் ஆண்டு நடை​பெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்​பையை கருத்​தில் கொண்டு தற்​போதைய தென் ஆப்​பிரிக்க தொடர் சீனியர் பேட்​ஸ்​மேன்​களான ரோஹித் சர்​மா, விராட் கோலி ஆகியோ​ருக்கு முக்​கி​யத்​து​வம் வாய்ந்​த​தாக அமைந்​துள்​ளது.

ஷுப்​மன் கில் காயம் காரண​மாக தொடரில் இருந்து வில​கி​யுள்​ள​தால் கே.எல்​.​ராகுல் தலை​மை​யில் இந்​திய அணி களமிறங்​கு​கிறது. ஒரு​நாள் போட்​டித் தொடரில் ஜஸ்​பிரீத் பும்​ரா, முகமது சிராஜ் ஆகியோ​ருக்கு ஓய்வு கொடுக்​கப்​பட்​டுள்​ளது.

கேப்​டன் ஷுப்​மன் கில்​லும், ஸ்ரேயஸ் ஐயரும் காயம் காரண​மாக விளையாட​வில்​லை. இவர்​கள் இல்​லாதது அணியை பலவீனப்படுத்​து​வது மட்​டுமல்​லாமல், தற்​காலிக கேப்​டன் கே.எல்​.​ராகுல் மற்​றும் தலைமை பயிற்​சி​யாளர் கவுதம் கம்​பீர் ஆகியோர் தங்​கள் பணி​களை கூடு​தல் பொறுப்​புடன் மேற்​கொள்ள வேண்டிய கட்​டா​யத்​துக்கு தள்​ளப்​பட்​டுள்​ளனர்.

தென் ஆப்பிரிக்காவுடன் முதல் ஒருநாள் போட்டியில் இன்று மோதல்: பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்தியா
‘சுழற்பந்து வீச்சை சிறப்பாக ஆட முயற்சிப்போம்’ - கேப்டன் கே.எல்.ராகுல் கருத்து

ஏனெனில் பேட்​டிங்​கில் மிடில் ஆர்​டரில் சுழற்​பந்து வீச்சு ஆல்​ர​வுண்​ட​ராக வாஷிங்​டன் சுந்​தரை பயன்​படுத்​து​வதா அல்​லது மிதவேகப்​பந்து வீச்சு ஆல்​ர​வுண்​ட​ரான நிதிஷ் குமார் ரெட்​டியை பயன்​படுத்​து​வதா என்​பதை அணி நிர்​வாகம் முடிவு செய்ய வேண்டும். அதேவேளை​யில் திலக் வர்மா நம்​பிக்கை அளிக்கக்கூடும். கேப்​டன் கே.எல்​.​ராகுல் விக்​கெட் கீப்​ப​ராக இடம் பெற்​றால் விளை​யாடும் லெவன் அணி​யில் ரிஷப் பந்த் இடம் பெறு​வது கடினமே.

இது ஒரு​புறம் இருக்க ஷுப்​மன் கில் இடத்​தில் யஷஸ்வி ஜெய்​ஸ்​வால் தொடக்க வீர​ராக களமிறக்​கப்​படக்​கூடும். பந்​து​வீச்சை பொறுத்​தவரை​யில் அர்​ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ஹர்​ஷித் ராணா, ரவீந்​திர ஜடேஜா, குல்​தீப் யாதவ் ஆகியோரை நம்​பியே இந்​திய அணி களமிறங்​கு​கிறது.

தென் ஆப்​பிரிக்க அணி டெஸ்ட் தொடரை வென்ற உற்​சாகத்​தில் ஒரு​நாள் போட்​டித் தொடரை அணுகு​கிறது. பேட்​டிங்​கில் வலுவான தொடக்​கம் கொடுக்​கக்​கூடிய ரியான் ரிக்​கெல்​டன், எய்டன் மார்க்​ரம், நிதான​மாக செயல்​படக்​கூடிய கேப்​டன் தெம்பா பவு​மா, அதிரடி​யாக விளை​யாடக்​கூடிய குயிண்​டன் டிகாக், டெவால்ட் பிரே​விஸ், மேத்யூ ப்ரீட்​ஸ்​கே, டோனி டி ஸோர்ஸி ஆகியோர் பலம் சேர்க்​கக்​கூடும்.

பந்​து​வீச்சை பொறுத்​தவரை​யில் இடது கை வேகப்​பந்து வீச்சாளர்களான மார்கோ யான்​சன், நந்த்ரே பர்​கர் ஆகியோர் இந்திய பேட்​டிங் வரிசைக்கு அழுத்​தம் கொடுக்​கக்​கூடும். இவர்களுக்கு உறு​துணை​யாக லுங்கி நிகிடி, ஓட்​னீல் பார்ட்​மேன் செயல்​படக்​கூடும். சுழற்​பந்து வீச்​சில் கேசவ் மஹா​ராஜ் அழுத்​தம் கொடுக்க முயற்​சிக்​கக்​கூடும்.

அணி​கள் விவரம் - இந்​தி​யா: கே.எல்​.​ராகுல் (கேப்​டன்), ரோஹித் சர்​மா, யஷஸ்வி ஜெய்​ஸ்​வால், விராட் கோலி, திலக் வர்​மா, ருது​ராஜ் கெய்க்​வாட், ரிஷப் பந்த், துருவ் ஜூரெல், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்​டன் சுந்​தர், ரவீந்​திர ஜடேஜா, குல்​தீப் யாதவ், ஹர்​ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா, அர்​ஷ்தீப் சிங்.

தென் ஆப்​பிரிக்​கா: தெம்பா பவுமா (கேப்​டன்), எய்​டன் மார்க்​ரம், ரியான் ரிக்​கெல்​டன், குயிண்​டன் டி காக், டெவால்ட் பிரே​விஸ், டோனி டி ஸோர்​ஸி, மேத்யூ ப்ரீட்​ஸ்​கே, ரூபின் ஹெர்​மன், கார்​பின் போஷ், மார்கோ யான்​சன், கேசவ் மகா​ராஜ், பிரெனலன் சுப்​ராயன், லுங்கி நிகிடி, நந்த்ரே பர்​கர், ஓட்​னீல்​ பார்ட்​மேன்​.

நேரம்​: பிற்​பகல்​ 1.30 | நேரலை: ஸ்​டார்​ ஸ்​போர்ட்ஸ்

நெருக்கடியில் கம்பீர்: சொந்த மண்ணில் 2-வது முறையாக டெஸ்ட் கிரிக்கெட் தொடரை முழுமையாக இழந்துள்ளதால் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மீது அதிக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எனினும் அவரது ஒப்பந்தம் 2027 உலகக் கோப்பை வரை உள்ளதால் அவரது பதவிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. எனினும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் அவரது வியூகங்கள் உன்னிப்பாக கவனிக்கப்படக்கூடும்.

அன்றும்... இன்றும்: முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெறும் ஜேஎஸ்சிஏ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்தான் கடந்த 2013-ம் ஆண்டு ரோஹித் சர்மா முதன்முறையாக இந்திய அணியின் முழுநேர தொடக்க வீரராக களமிறங்கினார். இது அவரது கிரிக்கெட் வாழ்க்கையை மட்டும் அன்றி ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தோற்றத்தையும் அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு சென்றது.

12 வருடங்கள் கடந்த நிலையில் தற்போது ரோஹித் சர்மா 37 வயதில் இதே மைதானத்தில் வித்தியாசமான சூழ்நிலையில் களமிறங்குகிறார். ஏனெனில் டெஸ்ட் தொடரை இழந்துள்ள இந்திய அணி, ஒருநாள் போட்டியில் மீண்டுவந்து பதிலடி கொடுக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளது. இந்திய அணியை பொறுத்தவரை அடுத்த ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற உள்ள டி 20 உலகக் கோப்பைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படலாம்.

ஆனால் ரோஹித் சர்மாவை பொறுத்தவரை 2027-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை நோக்கி பயணிக்க வேண்டியது உள்ளது. இதனால் அவர், உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்தக்கூடும். கடைசியாக அவர், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள் போட்டித் தொடரின் கடைசி ஆட்டத்தில் சதம் அடித்திருந்தார். இதேபோன்ற செயல் திறனை மீண்டும் வெளிப்படுத்த ரோஹித் சர்மா முயற்சிக்கக்கூடும்.

தென் ஆப்பிரிக்காவுடன் முதல் ஒருநாள் போட்டியில் இன்று மோதல்: பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்தியா
ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி: கோல் மழை பொழிந்தது இந்​திய அணி!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in