தாமஸ் கோப்பை பாட்மிண்டன் அரை இறுதிக்கு முன்னேறியது இந்திய அணி

சீன தைபேவை வீழ்த்தி பதக்கத்தை உறுதி செய்தது
தாமஸ் கோப்பை பாட்மிண்டன் அரை இறுதிக்கு முன்னேறியது இந்திய அணி
Updated on
1 min read

ஹார்சென்ஸ்: டென்​மார்க்​கின் ஹார்​சென்ஸ் நகரில் தாமஸ் கோப்பை பாட்மிண்டன் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதன் கால் இறுதி சுற்​றில் இந்​திய ஆடவர் அணி நேற்று சீன தைபேவுடன் மோதி​யது.

முதலில் நடை​பெற்ற ஒற்​றையர் ஆட்​டத்​தில் இந்​தி​யா​வின் லக் ஷயா சென், சவு தியென் சென்​னுடன் மோதி​னார். இதில் லக் ஷயா சென் 18-21, 22-20, 21-17 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்றார். இந்த ஆட்​டம் ஒரு மணி நேரம் 28 நிமிடங்​கள் நடை​பெற்றது. லக் ஷயா செனின் வெற்​றி​யால் இந்​திய அணி 1-0 என முன்​னிலை பெற்​றது.

தொடர்ந்து நடை​பெற்ற இரட்​டையர் பிரிவு ஆட்​டத்​தில் இந்​தியாவின் சாட்விக் சாய்​ராஜ் ராங்கி ரெட்​டி, ஷிராக் ஷெட்டி ஜோடி​யானழ சியு சியாங் சியே, வாங் சி-லின் ஜோடியை எதிர்கொண்டது. இதில் சாட்விக், ஷிராக் ஜோடி 23-21, 19-21, 21-12 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்​றது. இதையடுத்து நடை​பெற்ற ஒற்​றையர் ஆட்​டத்​தில் இந்​தி​யா​வின் ஆயுஷ் ஷெட்டி 21-16, 21-17 என்ற நேர் செட் கணக்​கில் லின் சுன் யி-யை தோற்​கடித்​தார். இந்த ஆட்​டம் 48 நிமிடங்​களில் முடிவடைந்​தது.

முடி​வில் இந்​திய அணி 3-0 என முழு​மை​யாக வெற்றி பெற்று அரை இறுதி சுற்​றுக்கு முன்​னேறியது. இதன் மூலம் இந்​திய அணி குறைந்த பட்​சம் வெண்​கலப் பதக்​கம் கைப்​பற்​று​வதை உறுதி செய்​துள்​ளது. 2022-ம் ஆண்டு சாம்​பிய​னான இந்​திய அணி அரை இறுதி சுற்​றில் ஜப்​பான் அல்​லது பிரான்​ஸுடன்​ பலப்​பரீட்​சை நடத்தும்​.

தாமஸ் கோப்பை பாட்மிண்டன் அரை இறுதிக்கு முன்னேறியது இந்திய அணி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அம்ப்ரிஷ்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in