Published : 24 Apr 2023 02:44 PM
Last Updated : 24 Apr 2023 02:44 PM
சென்னை: 'தோனி என்ற ஒற்றைப் பெயரே இன்றும் கோடிக்கணக்கான ரசிகர்களை கிரிக்கெட் பார்க்க வைக்கிறது' என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ட்வீட் மூலம் இதனை அவர் பகிர்ந்துள்ளார்.
நடப்பு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோனி வழிநடத்தி வருகிறார். இது அவர் பங்கேற்று விளையாடும் கடைசி ஐபிஎல் சீசன் என செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. சிலர் ‘இருக்கலாம்’ என்றும். சிலரோ ‘அதற்கு வாய்ப்பே இல்லை’ என்றும் சொல்லி வருகின்றனர். இந்தச் சூழலில் ஜெயக்குமார் இதனைத் தெரிவித்துள்ளார்.
“சச்சின் அவுட் ஆன பிறகு டிவியை ஆப் செய்த ஒட்டுமொத்த இந்தியாவையும் இறுதிவரை மேட்ச் பார்க்க செய்த இளைஞன் (இன்றும்). தோனி என்ற ஒற்றைப் பெயரே இன்றும் கோடிக்கணக்கான ரசிகர்களை கிரிக்கெட் பார்க்க வைக்கிறது. உன் ஓய்வறிந்து நீ குவித்த கோப்பைகளும் கண்ணீர் வடிக்கும்!” என ஜெயக்குமார் ட்வீட் செய்துள்ளார்.
சச்சின் அவுட் ஆனபிறகு டிவியை ஆப் செய்த ஒட்டுமொத்த இந்தியாவையும் இறுதிவரை மேட்ச் பார்க்க செய்த இளைஞன்(இன்றும்).
— DJayakumar (@offiofDJ) April 23, 2023
தோனி என்ற ஒற்றைபெயரே இன்றும் கோடிக்கணக்கான ரசிகர்களை கிரிக்கெட் பார்க்க வைக்கிறது.
உன் ஓய்வறிந்து நீ குவித்த கோப்பைகளும் கண்ணீர் வடிக்கும்!@ChennaiIPL @msdhoni pic.twitter.com/q9gan3SCjB
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT