Last Updated : 25 Sep, 2017 07:20 PM

 

Published : 25 Sep 2017 07:20 PM
Last Updated : 25 Sep 2017 07:20 PM

டாப் பேட்ஸ்மென்களை ஆஸி. உருவாக்கும் காலம் முடிந்து விட்டதோ? ஹர்பஜன் சிங் ஐயம்

தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் தோல்விகளைச் சந்தித்து வரும் ஆஸ்திரேலிய அணி நேற்று ஒருநாள் தொடரையும் இழந்தது.

இதனையடுத்து எங்கு தவறு நிகழ்கிறது என்று பிடிபடவில்லை என்றார் கேப்டன் ஸ்மித். பலரும் ஆஸ்திரேலிய அணியின் இந்தத் தோல்விகள் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மைக்கேல் கிளார்க்கும் தன் ட்விட்டரில், “40 ரன்கள் ஆஸ்திரேலியா குறைவாக எடுத்தது” என்று கூறியிருக்கிறார்.

இந்நிலையில் ஹர்பஜன் சிங் தன் ட்விட்டர் பதிவில் மைக்கேல் கிளார்க் தனது ஓய்வு முடிவை மாற்றிக் கொண்டு மீண்டும் களமிறங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

தனது ட்விட்டரில் ஹர்பஜன் கூறியிருப்பதாவது:

தோழா (கிளார்க்) நீங்கள் உங்கள் ஓய்வு முடிவை உதறி மீண்டும் வந்து ஆட வேண்டும். டாப் பேட்ஸ்மென்களை உருவாக்கும் ஆஸி.யின் காலம் முடிவுக்கு வந்து விட்டது என்று நான் உணர்கிறேன்.

இவ்வாறு கூறியுள்ளார் ஹர்பஜன் சிங்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x