சர்ச்சை எதிரொலி: இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா ராஜினாமா

சேத்தன் சர்மா | கோப்புப் படம்
சேத்தன் சர்மா | கோப்புப் படம்
Updated on
1 min read

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மாவிடம் இந்திய தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய ரகசிய புலனாய்வு விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியது.

ரகசிய புலனாய்வு விசாரணையில் சேத்தன் சர்மா, “விராட் கோலி, கங்குலி இடையே ஈகோ பிரச்னைகள் இருந்தன. கிரிக்கெட் வாரியத்தை விடவும் தன்னை மிகப்பெரிய ஆளாக கோலி நினைத்துக் கொண்டார். யாரும் அவரைத் தொட முடியாது என்ற எண்ணமும் அவருக்கு இருந்தது. இந்திய வீரர்கள் உடல் தகுதி பெறாத நிலையில் ஊக்க மருந்து எடுத்து கொண்டனர்” என சர்ச்சைக்கு மிகுந்த கருத்துகளை பேசி இருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியது. ( ஒரு வீரர், பிசிசிஐக்கு எதிராக செயல்படுவது அரிதான ஒன்று - தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா )

மேலும், இதனை தொடர்ந்து சேத்தன் சர்மா மீது இந்திய அணி நிர்வாகம் தனது நம்பிக்கையை இழந்துவிட்டதாக கூறப்பட்டது

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் பதவியை சேத்தன் சர்மா இன்று (பிப்.17) ராஜினாமா செய்திருக்கிறார். அவரது ராஜினாமாவை பிசிசிஐ எற்றுக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in