Published : 24 Jan 2023 05:41 AM
Last Updated : 24 Jan 2023 05:41 AM

கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா - நியூஸி. இன்று மோதல்

இந்தூர்: இந்தியா – நியூஸிலாந்து அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தூரில் இன்று பிற்பகல் 1.30 மணி அளவில் நடைபெறுகிறது.

இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 16 ரன்கள் வித்தியாசத்திலும், ராய்பூரில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 8 விக்கெட்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றது.

இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை இந்திய அணி 2-0 என தன்வசப்படுத்தியது. இந்நிலையில் கடைசி போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட்மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

முதல் ஆட்டத்தில் இந்திய அணி பேட்டிங்கில் பிரமாதமாக செயல்பட்ட நிலையில் 2-வது ஆட்டத்தில் பந்து வீச்சில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது. வலுவான பேட்டிங் வரிசையை கொண்ட நியூஸிலாந்து அணியை இந்திய பந்து வீச்சாளர்கள் 108 ரன்களுக்குள் சுருட்டினர்.

தொடரை வென்றுவிட்டதால் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியில் முன்னணி வீரர்கள் சிலருக்கு ஓய்வு கொடுக்கப்படக்கூடும்.

இருப்பினும் தொடரை முழுமையாக 3-0 என கைப்பற்றுவதில் இந்திய அணி தீவிரம் காட்டக்கூடும். அதேவேளையில் நியூஸிலாந்து அணி ஆறுதல் வெற்றி பெற முயற்சி செய்யக்கூடும்.


தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x