Published : 26 Oct 2016 10:03 AM
Last Updated : 26 Oct 2016 10:03 AM
மலேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஆடவர் ஹாக்கியில் இந்தியா 9-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது. இந்திய அணி தரப்பில் ஆகாஷ் தீப் சிங், ஆபான் யூசுப், ஜஸ்தித் சிங் குலார் ஆகியோர் தலா இரு கோல்களும் ரூபிந்தர் பால் சிங், திம்மையா, லலித் உபாத்யாய் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.
இந்த ஆட்டத்தில் சீன அணியின் தடுப்பாட்டம் மோசமான வகையில் இருந்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 10 புள்ளிகளுடன் அரை இறுதிக்கு முன்னேறியது. இந்தியா தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று மாலை 6.30 மணிக்கு மலேசியாவை எதிர்கொள்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT